search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடற்கல்வி ஆசிரியர்"

    • உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்
    • நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கான இடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

    மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி இடத்திற்கு தேர்வு செய்யலாம் என அறிவித்து ஏகாட்டூர், திருவூர் பள்ளிக்கு மட்டும் நேற்று இரவு 8 மணியளவில் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.

    இதனால் குறைவான இடத்திற்கு ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் ஆர்கே பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் அறிவிப்பு தரவில்லை என்று உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உடற்கல்வி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
    • உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் 53-வது ஆண்டு விளையாட்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமணன் செட்டியார், துணைத்தலைவர் சேவுகன் செட்டியார், செயலாளர் சாந்தி ஆச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்டார்.

    கல்லூரியில் முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    விழா தொடக்கத்தில் 11 துறைகள் சார்பாக அணி வகுப்பு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 18பேர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து மைதானத்தில் ஜோதியை ஏற்றி வைத்தனர்.

    இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நமது சமூகம் பரீட்சை நடத்தும் சமூகமாக இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரத்தை 6 அல்லது 8 நிமிடத்தில் கடக்கக்கூடிய மாணவ- மாணவிகளை மட்டும்தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி என்பது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நல்ல உடற்கல்வி ஆசிரியர் தேவை. தமிழ்நாடு அரசு ஸ்போர்ட்ஸ் சென்டர் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அடிக்கடி விளையாட்டு விழா நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.

    ×